Showing posts with label பொரியல். Show all posts
Showing posts with label பொரியல். Show all posts

Saturday, March 1, 2014

ரோஸ்டட் உருளைகிழங்கு

தேவையானவை சின்ன உருளைகிழங்கு 1/4 கிலோ (உப்பு சேர்த்து வேகவைக்கவும்) எண்ணெய் 1/2 தே.க கடுகு 1/4 தே.க மஞ்சள்தூள் 1/4 தே.க மிளகாய்த்தூள் 1/4 தே.க பெருங்காயத்தூள் 1/4 தே.க கறிவேப்பிலை கொஞ்சம் செய்முறை கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை போட்டு தாளிக்கவும் தீயை மிதமாக வைத்து தேவையான அளவு காரத்திற்கேப்ப சேர்த்து மீண்டும் தேவையான அளவு உப்பு சேர்த்து மஞ்சள்தூள் வேகவைத்து தோலுரித்த உருளையை சேர்க்கவும். மிதமான தீயில் மூடி போடாமல் வேகவைத்து எடுக்கவும்.நல்ல கிரிஸ்பியான உருளை ரோஸ்ட் ரெடி.

Tuesday, December 11, 2012

கேரட் உருளை வதக்கல் (கேரளா ஸ்டைல்)







தேவையானவை

கேரட்   பொடியாக அரிந்தது         1 கப்
உருளை     ”                                           1 கப்
வெங்காயம்                                          1
மஞ்சள் தூள்                                          1/2 தே.க
உப்பு                                                          தேவைகேற்ப்ப
கறிவேப்பிலை
  
அரைக்க

தேங்காய துருவல்                2 தே.க
சீரகம்                                           1/4 தே.க
மிளாகாய வற்றல்                  2(காரத்திற்க்கு எற்ப)

தாளிக்க

எண்ணெய் (தேங்காய் )            1
கடுகு                                                1/4 தே.க
உளுந்தம்பருப்பு                          1/4 தே.க
பெருங்காயத்தூள்                       1/4 தே.க



செய்முறை

கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து, வெங்காயம், சேர்த்து வதக்கியதும் அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெட்டி வைத்துள்ள காய்களையும் சேர்த்து ,மஞ்சள் தூளையும் சேர்த்து  1/2 தே.க எண்ணெய் விட்டு நன்றாக  கலந்து குறைந்த தீயில் 5 நிமிடம் வதக்கவிடவும்., நன்றாக வதங்கியதும் உப்பை சேர்த்து மேலும் குறைந்த தீயில் 5 நிமிடம் வேகவிடவும். கொஞ்சமாக தண்னிர் தெளிக்கவும். நிறய்ய தண்ணிர் விட்டால் அதன் டேஸ்ட்  வேறுபடும்.
கடைசியாக அரைத்துள்ள தேங்காய் கலவை சேர்த்து பிரட்டி எடுக்கவும்.
நல்ல டேஸ்டியான கேரட் உருளை வதக்கல் (பொரியல்) ரெடி.

குறிப்பு: தேங்காய், சீரகம், வற்றல்மிளாகாய் ஒன்றிரண்டாக க்ரஸ் செய்தது போல் அரைத்து எடுக்கவும். தண்ணிர் சேர்க்க வேண்டாம்.
உப்பு கடைசியில் சேர்க்கவும்.

இது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு ஹெல்தியான வெஜ் பொரியல்.






Wednesday, December 8, 2010

வாழக்காய கிர்ஸ்பி வறுவல்





தேவையானவை

வாழக்காய் 2
தனியா தூள் 1/2 தே.க
மஞ்சள் தூள் 1/2 தே.க
மிளகாய்தூள் 1/2 தே.க
புளி பேஸ்ட் 1/2 தே.க
உப்பு தேவைகேற்ப்ப

தாளிக்க
எண்ணெய் 1/2 தே.க
கடுகு 1/2 தே.க
உளுத்தம்பருப்பு 1/4 தே.க
பெருங்காயத்தூள் 1/2 தே.க
க்றிவேப்பிலை 4 இலைகள்

செய்முறை

வாழைக்காயை நல்ல தோலெடுத்து 1/4 இன்ஞ் கனத்தில் வட்ட வடிவத்தில் வெட்டி புளிபேஸ்ட் அல்லது புளிதண்ணிரில் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் தண்ணிரை நன்றாக வடித்து காயை போட்டு நன்றாக வதக்கவும்.
வதங்கியதும் தனியாத்தூள்,மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் போட்டு நன்றாக பிரட்டி எடுக்கவும்.
நல்ல கிரிஸ்பி வாழக்காய் வறுவல் ரெடி.
இதை கலந்த சாதம், தயிர்சாதம், வற்றகுழம்பு சாதம் எல்லாவற்றிற்கும் பெஸ்ட் காம்பினேஷன்.
டூருக்கும் எடுத்து செல்ல பெஸ்ட்.

நீண்ட இடைவெளிக்கு பின் வர முடிந்தது. என் கம்யூட்டரில் மேஜர் வைரஸ் அட்டாக் ஆகி டாக்டரிம் சென்று விட்டு நிறய்ய ப்ர்காஷன் மெடிகேசன்ஸோட மீண்டும் உஙக் எல்லோரையும் ஆவலோடு பார்க்க இந்த விஜிஸ் வெஜ் கிச்சன் வந்தாச்சு.


Friday, October 1, 2010

தண்டு கீரை பொரியல்




தேவையானவை

தண்டுகீரை - 1 கப் பொடியாக அரிந்தது
வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது
பச்சை பருப்பு - 1/4 கப் மலராக வேகவைத்தது

தாளிக்க

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
உளுத்தம் பருப்பு - 1/4 தே.க
பெருங்காய தூள் - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொன்ச்ஜம்

செய்முறை

தண்டுகீரையை நல்ல மண்போக அலசி தண்டு கீரையை நல்ல
சின்ன துண்டுகளாக அரியவும்.
வெங்கயாத்தை பொடியாக அரியவும்.
பருப்பை மலர வேகவைக்கவும்.
கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து வெங்காயம்,கீரை,
உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெந்ததும் பருப்பையும் சேர்த்து வேண்டுமானல் துறுவிய
தேங்காயும் சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.
இது சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

Wednesday, September 29, 2010

ப்ரோட்டின் வெஜ் பொரியல்


தேவையானவை

வெங்காயம் - பொடியாக அரிந்தது 1/4 கப்
வெள்ளரிக்காய் - 1 துண்டுகளாக்கியது
குடமிளகாய் - 1 துண்டுகளாக்கியது
வேகவைத்த கொண்டைகடலை - 1/4 கப்
வேவைத்த காராமணி - 1/4 கப்
வேகவைத்த பச்சை பயறு - 1/4 கப்
கேரட் - 1/4 கப்சின்ன துண்டுகளாக்கியது
சாட் மசாலா தூள் - 1/4 தே.க
மிளகு தூள் - 1/4 தே.க

தாளிக்க
எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்
சீரகம் - 1/4 தே.க
வெள்ளை எள் - 1 தே.க ரோஸ்டட்

செய்முறை

கடாயில் தாளிக்கயுள்ளதை தாளித்து அதில் வெங்காயம்,
(வேண்டுமென்றால் தக்காளி கேரட், குடமிளகாய்,வெள்ளாரிக்காய்)
சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும், சாட்தூள்,மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.
எல்ல தானியவகைகளும் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
வதங்கியதும் வெள்ளை எள் தூவி,கொத்தமல்லி இலையும் சேர்த்து
நன்றாக கலந்து வேண்டுமென்றால் லெமன் ஜுஸ்
சேர்த்து இறக்கவும்.
இதை கலந்த சாதத்திற்க்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
இதை சால்ட் போலவும் சாப்பிடலாம்.

Friday, August 27, 2010

பீட்ரூட் இலை பொரியல்





பீட்ரூட் இலை - ஒரு சின்ன கட்டு
வெங்காயம் - 1

தாளிக்க

எண்ணெய் - 1/2 தே.க
கடுகு - 1/4 தே.க
வற்றல் மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை

பீட்ரூட் இலைகளை நன்றாக மண்போக அலசி எடுக்கவும்
வெங்காயத்தை நல்ல பொடியாக அரியவும்.
கீரையும் பொடியாக அரியவும்.
கடாயில் தாளிக்கயுள்ளதை போட்டு தாளித்து அரிந்து வைத்துள்ள
வெங்காயம் போட்டு வதக்கவும்.
கொஞ்சம் நிறம் மாற தொடங்கியது அரிந்துள்ள கீரையும், உப்பையும்
சேர்த்து கிளறிவிட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
நல்ல வதங்கி வந்ததும் இறக்கவும்.
இது உடம்பிற்க்கு மிகவும் நல்லது. நிறய்ய வைட்டமின்ஸ் அடங்கியுள்ளது.
இதில் சாதாரண கீரையை போல் செய்யலாம்.
பூண்டும் சேர்த்தும் செய்யலாம்.




Wednesday, April 28, 2010

சேப்பங்கிழங்கு வறுவல்




தேவையானவை



சேப்பங்கிழங்கு - 1/4 கிலோ

உப்பு - தேவைகேற்ப்ப

மிளகாய் தூள் - 1/2 தே.க

அரிசிமாவு - 1/4 தே.க

மஞ்சள் தூள் - 1/2 தே.க





தாளிக்க

---------


எண்ணெய் - 1/2 தே.க

கடுகு - 1/2 தே.க

உளுத்தம் பருப்பு - 1/2 தே.க

கறிவேப்பிலை - கொஞ்சம்

பெருங்காயத்தூள் - 1/4 தே.க


செய்முறை


கிழங்கை தோல் சீவி உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கவும்.

குழையாமல் வேகவைக்கவும்.

நல்ல சூடு ஆறிய்பின் அதி சின்ன துண்டுகளாக்கி வைக்கவும்,

கடாயில் என்ணெய் விட்டு அதில் தாளிக்கயுள்ளதை தாளித்து

பிசிறிவைத்துள்ள துண்டுகளை போட்டு குறைந்த தீயில் வறுக்கவும்.

நல்ல கிரிஸ்பியான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி.

குறிப்பு: கிழங்கை வேகவைக்காமல் சின்ன துண்டுகளாக்கி எண்ணெயில்

தாளித்த பின் இந்த கிழங்கு துண்டுகளை சேர்த்து வறுத்து எடுக்கலாம்.

நிறய்ய நேரம் தேவைப்படும்.



Thursday, April 1, 2010

க்ரிஸ்ப்பி பாகற்காய்




தேவையானவை

பாகற்க்காய் - 2
அரிசி மாவு - 1 தே.க
கடலைமாவு – 1 தே.க
மிளகாய் தூள் – ½ தே.க
மஞ்சள் தூள் - ½ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்ணெய் - பொரிப்பதற்க்கு


செய்முறை

பாகற்க்காயை நன்றாக தண்ணிரில் கழுவி ¼ இன்ஞ் கனத்தில் வட்ட வடிவமாக கட் செய்யவும்.
தண்ணிரில் உப்பு,மஞ்சள் தூள் கலந்து அதில் கட் செய்த
பாகற்க்காயை போட்டு வைக்கவும்.
ஐந்து நிமிடத்திற்க்கு பின் எடுத்து ஒரு பேப்பர் டவலில்
பரத்தி வைக்கவும்.
ஒரு தட்டில் மாவு,மிளகாய்தூள்,உப்பு, எல்லாம் சேர்த்து நன்றாக
கலந்து வைக்கவும், தண்ணிர் சேர்க்க வேண்டாம். உலர்பொடியாக இருக்கவேண்டும்.
உலந்த பாகற்காயை மாவு கலவையில் பிசிறி எண்னெயில்
பொன்நிறமாக பொரித்தெடுக்கவும்.
பாகற்காயின் கசப்பே தெரியாமல் எல்லாம் காலியாகிவிடும்.
இதை தயிர்சாதம், சாம்பார் சாதம், சேர்த்து சாப்பிடலாம்.
இதே போல் வெண்டை, காலிப்ஃளவர், வாழைக்காய்,சேனை
போன்றவற்றிலும் செய்யலாம்.

Tuesday, March 30, 2010

வாழப்பூ பருப்பு உசிலி




தேவையானவை
கடலைபருப்பு - ½ கப்மிளகாய் வற்றல் - 3
தேங்காய துருவல் - 1 தே.கமஞ்சள் தூள் - ½ தே.கபெருங்காயம் - சின்ன துண்டுஉப்பு - தேவைகேற்ப்ப


செய்முறை


வாழைப்பூவைநன்குஆய்ந்துபொடியாகநறுக்கிமோர்+தண்ணிர்,உப்பு,
மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். (மோர் சேர்த்தால் கருக்காமல் இருக்கும்).பருப்பு,மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து தண்ணிர் இல்லாமல் அரைத்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அரைத்துள்ள பருப்பு
கலவையை போட்டு மிதமான தீயில் கிளறவும்.
நன்றாக உதிரியானதும் வேகவைத்துள்ள வாழைப்பூ, தேங்காய துருவல் சேர்த்து மீண்டும் கிளறவும்.
பருப்பு உசிலி, மோர் குழம்பு காம்பினேஷன் sநன்றாக இருக்கும்.
குறிப்பு: சிலபேர் பருப்பு கலவயை இட்லி தட்டில் வைத்து வேகவைத்து உதிர்த்து சேர்ப்பதுண்டு
சிலபேர் துவரம்பருப்ம்,கடலைபருப்பும் சேர்த்து செயுவார்கள்.

Tuesday, March 2, 2010

ப்ரோக்கலி கேரட் பொரியல்



ப்ரோக்கலி - 1

கேரட் - 1


தாளிக்க


எண்ணெய் - 1 தே.க

கடுகு - 1/2 தே.க

உளுந்தம் பருப்பு - 1/4 தே.க

சீரகம் - 1/2 தே.க

பெருங்காயம் - 1/2 தே.க

மிளகு தூள் - 1/4 தே.க

கொததமல்லி இலை - கொஞ்சம்



செய்முறை


பாத்திரத்தில் தண்னிரை விட்டு கொதிக்க வைக்கவும்.

கொத்தித தண்ணிரில் உப்பு போட்டு ப்ரோக்கலி பூவை தனிதனியாக பிரித்து போடவும்.

ஐந்து நிமிடம் கழிந்து நல்ல வடிகட்டவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கயுள்ளதை தாளிக்கவும்,

கேரட்டை போட்டு ஐந்துநிமிடம் வதக்கவும்.

வதங்கிய பின் வடியவைத்துள்ள ப்ரோக்கலி பூவை சேர்க்கவும்.

பின் பெப்பர் அல்லது மிளகாய் தூள் தூவி நல்ல பிரட்டி எடுக்கவும்.

நல்ல சத்துள்ள ஸ்டிர் ப்ரை ப்ரோக்கலி கேரட் ரெடி.


ப்ரோக்கலி சீக்கிரம் வெந்து விடும். நிறய்ய நேரம் தண்ணிரில் வேகவிடகூடாது.

Thursday, December 24, 2009

கோவக்காய் உருளை ப்ரை


தேவையானவை
---------------

கோவக்காய் - 1 கப்
காரட்,உருளை - 1/4 கப்

தாளிக்க
-----------

எண்னெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
சீரகம் - 1/4 தே.க
வற்றல் மிளகாய் - 1
பெருங்காயதூள் - 1/4 தே.க


செய்முறை
--------

கோவைக்காயை நல்ல வட்டமாக நறுக்கவும்.
உருளை+காரட் தோல் சீவி வட்டமாக நறுக்கவும்.
பான் அல்லது கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கயுள்ளதை
போட்டு தாளித்து காய்களை போட்டு மஞ்சள் தூள் சேர்த்து
அடுப்பை குறந்த தீயில் வைத்து நல்ல வதக்கவும்.
ஐந்து நிமிடம் வதங்கிய பின் உப்பு சேர்த்து
மேலும் பத்து நிமிடம் வதக்கவும்.
நல்ல வதங்கி மொறு மொறு கோவக்காய் ப்ரை ரெடி

குறிப்பு: எந்த காயானும் ப்ரை என்றால் முதலில்
உப்பு சேர்க்காமல் குறைந்த தீயில் வைத்து
மூடி போடாமல் வதக்கவும்,
கொஞ்சம் வதங்கிய பின் உப்பு சேர்த்தால் நல்லா இருக்கும்.
இந்தமாதிரி செய்தால் காய் நல்ல மொறுமொறுவென்று வதங்கி வரும்.

Saturday, December 19, 2009

அவரை மொச்சை பொரியல்


அவரை மொச்சை பொரியல்

தேவையானவை
---------------------

அவரைக்காய் - 1 கப்
மொச்சை - 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 தே.க


தாளிக்க
----------
எண்னெய் - 1 தே.க
கடுகு - 1/2 தே.க
வற்றல் மிளகாய் - 1
கறிவேப்பிலை - கொஞ்சம்
பெருங்காயதூள் - 1/4 தே.க


செய்முறை
--------------

மொச்சையை ஊற வைக்கவும்.
அவரையை பொசியாக நறுக்கவும்.

பாத்திரத்தில் மொச்சை,அவரை,உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
கடாயில் அல்லது பானில் தாளிக்கயுள்ளதை தாளித்து
வெந்த அவரை,மொச்சை,தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு
ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவைக்கவும்.

குறிப்பு: நிலக்கலை, கடலைபருப்பு, சன்னா, பட்டாணி
ஏதுவானலும் சேர்த்து செய்யலாம். வெங்காயம் சேர்த்தும்
செய்யலாம்.

Friday, December 18, 2009

காலிஃப்ளவர் ப்ரை




தேவையானவை

காலிப்ஃளவர் - 1
மிளகாய் தூள் - 1 தே.க
கார்ன் மாவு - 1 தே.க
அரிசிமாவு - 1 தே.க
உப்பு - தேவைகேற்ப்ப
எண்னெய் - பொறிக்க


செய்முறை
பாத்திரத்தில் 2 கப் தண்ணிர் விட்டு கொதிக்க வைக்கவும்.
காலிப்ளவரை சின்ன பூக்களாக பிரித்து கொதிக்க்கும் வெந்நிரில் போட்டு எடுத்து வடிய வைக்கவும்.

பாத்திரத்தில் அல்லது ட்ரேயில் எல்லா மாவுகளயும்,உப்பையும்போட்டு கொஞ்சம் தண்ணிர் தெளித்து பிசறி வைத்து கொள்ளவும்.
காலிஃபளவரை அதில் போடு பிசறி சூடாகியுள்ள எண்ணெயில்
போட்டு பொன்னிறமாக பொறிக்கவும்.
இதை சாததோடவும், வெறும் ஸ்னாக்காவும் சாப்பிடலாம்.
நொடியில் காலியாகிவிடும்.