Friday, February 5, 2010

பாவக்காய் உருளை தீயல்









தேவையானவை
--------------------
பாவக்காய் - 2
உருளை - 2
வெங்காயம் - 1
தக்காளி - 2

தாளிக்க
-----------
எண்ணெய் - 1 தே
கடுகு - 1/2 தே.க
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தீயல் பொடி
----------------
மிளகாய் வற்றல் - 5
தனியா - 1 தே.க
மிளகு - 1/2 தே.க
கறிவேப்பிலை - 4 இணுக்கு
மஞ்சள் தூள் - 1/2 தே.க
தேங்காய துருவல் - 1/2 கப்

புளியை தண்னிரியில் ஊற வைக்கவும்.
பாவக்காய், உருளை இரண்டையும் அரை இன்ஞ் நீளத்தில் நறுக்கவும், வெங்காயம், தக்காளி இரண்டையும் துண்டுகளாக்கவும்.
கடாயில் தேங்காய தவிர மற்ற எல்லாவற்றையும் எண்ணெய் விடாமல் நல்ல சிவப்பாக வறுக்கவும்.
சூடு ஆறிய பின் பொடிக்கவும்.
கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி போட்டு வத்ங்கிய பின் நறுக்கிய பாவக்காய், உருளை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போனதும் புளி தண்னிர், உப்பு,
மஞ்சள் தூள் சேர்த்து மேலும் பத்து நிமிடம் வதக்கவும்.
நல்ல வதங்கிய பின் தீயல் பொடியை சேர்த்து மேலும் கொஞ்சம் தண்ணிர் சேர்த்து கொதிக்க விடவும்.
நல்ல கெட்டியானதும் தாளிக்கயுள்ளதை தாளித்து போடவும்.
கறிவேப்பிலை போட்டு இறக்கவும்.
சூடு சாததிற்க்கு நல்ல காம்பினேஷன்.
இதே போல் சின்ன வெங்காயம். சேனை, வழுதலங்காய்,கத்தரிக்காய் ,முருங்கைகாய், போன்றவற்றிலும் செய்யலாம்.

4 comments:

Porkodi (பொற்கொடி) said...

differenta irukku.. i have never tried a theeyal!

Mahi said...

நல்லாருக்கு விஜி..ஆமாம்,அதென்ன "வழுதலங்காய்"?? என்ன காய் அது??

Vijiskitchencreations said...

வாங்க பொற்கொடி உங்கள் வருகைக்கு நன்றி.

ஆமாம் இது கேரளாவின் ஸ்பெஷல் தீயல் என்பது ஒரு வகை குழம்பு அதுவும் பருப்பு ஏதும் இல்லாமல் செய்யகூடியது. நல்ல டேஸ்டியா இருக்கும் பொற்கொடி. இதில் உள்ளி தியல் ரொம்ப பிரசித்தம். பாவக்காய் தீயல். ட்ரை பன்னுங்க.

Vijiskitchencreations said...

மகி வாங்க. வழுதலங்காய் என்பது நீளமாக் வயலட் கலரில் அல்லது பச்சை கலரில் இருக்கும் கத்தரிக்காயை தான் சொல்வார்கள்.